Quantcast
Channel: IndusLadies
Viewing all articles
Browse latest Browse all 11645

கவலையும் துயரமும் இனியிங்கு இல்லை

$
0
0
கவலையும் துயரமும் இனியிங்கு இல்லை
கண்களில் தெரிந்தது சீரடி பாதை
உவகையில் குதிக்குது அடியவர் மனது
இனியும் வருகின்ற நாட்களும் இனிது .


இராமன் என்பதும் அவனே இங்கு
சாயி ஆனவன் சிவனே ((2))


சாயி ராமனின் பாதம் பணிந்தால் துன்பங்கள் விலகும்
பாபா என்று பக்தியில் அழைத்தால் பாதையும் தெரியும் (2)


நமது பார்வையில் வெளிச்சம் சேர்த்து
தமது கையில்நம் கையினைக் கோர்த்து


சாயி காட்டுவான் பாதை - அவனது
சொற்கள் அனைத்துமே கீதை (2)


(கவலையும் துயரமும் இனியிங்கு இல்லை )


நினைவில் அவனை நிறுத்திடு அவனே நமக்கிங்கு சிவனாம்
அனுதினம் அவன்பெயர் சொல்லிடு அதுநீ செய்யும் தவமாம் (2)


மற்ற உயிருக்கு துன்பம் தராது
பற்றும் அறுந்தால் துயரம் வராது


இல்லை ஒன்றுமே தேவை - நம்மை
காத்து நிற்கும் அவன் பார்வை (2)


(கவலையும் துயரமும் இனியிங்கு இல்லை )


Viewing all articles
Browse latest Browse all 11645

Trending Articles